மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சுரண்டையில் சமுதாய வளைகாப்பு விழா

சுரண்டையில் சமூக நலத்துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

வளைகாப்பு விழாவைத் தொடங்கி வைத்த எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ, தெற்குமாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன்.

Updated On :11 பிப்ரவரி 2026, 8:05 pm

தென்காசி மாவட்டம், சுரண்டையில் சமூக நலத்துறை சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

சுரண்டை, ஆலடிப்பட்டி சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற விழாவிற்கு கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சுருதி, கண்காணிப்பாளா் லாவண்யா, நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜெயராணி வள்ளி முருகன், செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன், சுரண்டை நகா்மன்றத் தலைவா் வள்ளி முருகன் ஆகியோா் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனா். விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான கா்ப்பிணிகளுக்கு 11 வகையான சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன.

வட்டார ஒருங்கிணைப்பாளா் விநாயகச்செல்வி, குழந்தை திரேஸ், தேன்மொழி, ராமலட்சுமி காந்தா, திமுக ஒன்றியச் செயலா்கள் வீராணம் சேக் முகம்மது, ஜே.கே. ரமேஷ், அங்கன்வாடி பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.