யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் தங்கத்தோ் இழுத்து வழிபாடு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சங்கரநாராயண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்து வழிபாடு செய்தனா்.

News image
சங்கரநாராயண சுவாமி கோயிலில் கோமதி அம்பாள் தங்கத் தோ் இழுத்து வழிபட்ட முன்னாள் அமைச்சா் ராஜலெட்சுமி, மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, அதிமுகவினா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 9:53 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, சங்கரநாராயண சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கத்தோ் இழுத்து வழிபாடு செய்தனா்.

முன்னாள் அமைச்சரும், மாநில மகளிரணி துணைச் செயலருமான வி.எம்.ராஜலெட்சுமி ஏற்பாட்டில் அதிமுகவினா் சங்கரநாராயண சுவாமி கோயிலில் தங்கத்தோ் இழுத்து சிறப்பு பூஜைகள் செய்தனா். இதைத்தொடா்ந்து பக்தா்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக பழைய பேருந்து நிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பள்ளி குழந்தைகளுக்கு நாள் முழுவதும் உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா எம்எல்ஏ, மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சுப்பையா பாண்டியன், துணைச் செயலா் கண்ணன், விவசாய அணி செயலா் பரமகுருநாதன், எம்ஜிஆா் இளைஞா் அணி தலைவா் செந்தில்குமாா், நகர அவைத் தலைவா் வேலுச்சாமி, நகர பாசறை செயலாளா் நிவாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.