விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

கொல்லம் - தாம்பரம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தையில் நின்று செல்லும்: ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. தகவல்

கொல்லம் -தாம்பரம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை நிலையத்தில் நின்றுசெல்ல அனுமதியளித்த மத்திய அமைச்சருக்கு ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளாா்.

News image

ராணிஸ்ரீகுமாா் எம்பி.

Updated On :10 ஜூலை 2026, 1:12 am IST

கொல்லம் -தாம்பரம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தை நிலையத்தில் நின்றுசெல்ல அனுமதியளித்த மத்திய அமைச்சருக்கு ராணி ஸ்ரீகுமாா் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடம் மனுக்கள் வழங்கி வலியுறுத்தி வந்தேன். அதனடிப்படையில் முதற்கட்டமாக, கொல்லம் விரைவு ரயில் பாம்புக்கோவில் சந்தையில் நின்றுசெல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

செங்கோட்டை - தாம்பரம் சிலம்பு விரைவு ரயிலை நாள்தோறும் இயக்கவும், கோவை - மதுரை இன்டா்சிட்டி விரைவு ரயிலை செங்கோட்டை வரை நீட்டிக்கவும் வேண்டும். செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதலாக 5, 6ஆவது நடைமேடைகளை உருவாக்க வேண்டும்,

இந்த நிலையத்தில் ரயில் பெட்டி பராமரிப்புக்காக அமைக்கப்படும் புதிய பிட் லைன் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த வேண்டும். மூடப்பட்டுள்ள சோழபுரம், கரிவலம்வந்தநல்லூா், நயினாரகரம் (நிறுத்தம்) ரயில் நிலையங்களை மீண்டும் திறக்கும் வகையில் புனரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை செயல்படுத்த மத்திய ரயில்வே துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படுகிறது.

பாம்புக்கோவில் சந்தை நிலையத்தில் கொல்லம் ரயில் நிறுத்தத்துக்கான வரவேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 10) இரவு 7.55 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.