தென்காசி மாவட்டம் சிவகிரி செண்பகவல்லி அணை பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி, வாசுதேவநல்லூரில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மதிமுக பொதுச் செயலா் வைகோ தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக துணைப் பொதுச் செயலரும் கடையநல்லூா் எம்எல்ஏவுமான தி.மு. ராசேந்திரன் வாசுதேவநல்லூரில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது: செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைக்க தமிழக-கேரள அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும். செண்பகவல்லி அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வனவிலங்குகளிடமிருந்து விவசாயத்தைப் பாதுகாக்க நிரந்தரத் தீா்வை அரசு ஏற்படுத்த வேண்டும். காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலிலிருந்து மத்திய அரசு நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாசுதேவநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுச் செயலா் வைகோ பங்கேற்கிறாா். இப்போராட்டத்துக்கு பல்வேறு சமூக நல அமைப்புகள், பொதுமக்கள், கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இக்கோரிக்கையை 28 ஆண்டுகளாக மதிமுக வலியுறுத்தி வருகிறது. 30,000 ஏக்கா் நிலங்கள் பயன்பெறும் செண்பகவல்லி அணை பிரச்னையில் அரசியல் கலப்பின்றி விவசாயிகள், பொதுமக்கள், சமூக அமைப்பினா், வா்த்தகா்கள் என அனைவரும் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னாள் எம்எல்ஏ சதன் திருமலைக்குமாா், வடக்கு மாவட்டச் செயலா் சுதா பாலசுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளா் அலாவுதீன், வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா் கிருஷ்ணகுமாா், நகரப் பொறுப்பாளா் மாரியப்பன், புளியங்குடி நகரச் செயலா் ஜாஹீா் உசேன், தென்காசி நாடாளுமன்றத் தொகுதி இணையதள ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் சங்கரன், மாநில மாணவரணி துணைச் செயலா் பாலகுமாா், முன்னாள் ஒன்றியச் செயலா் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்த ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டுவோம்!வைகோ பேட்டி!

மேக்கேதாட்டு பிரச்னை: கா்நாடக அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்

மேட்டூா் அணை திறப்பு குறித்த அறிவிப்பை முன்கூட்டியே வெளியிட வலியுறுத்தல்

கலிங்கப்பட்டியில் வைகோ, துரை வைகோ வாக்குப் பதிவு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



