/
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்குவாரியில் திங்கள் கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் தனியாா் கல்குவாரி உள்ளது. இங்கு திங்கள்கிழமை 3 தொழிலாளா்கள் கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக பாறை சரிந்து கல் உடைக்கும் இயந்திரத்தில் விழுந்தது. இதில், அந்த இயந்திரத்தில் உள்ளிருந்து பணிபுரிந்த முக்கூடல் கீழ பாப்பாக்குடியை சோ்ந்த முருகன் மகன் இசக்கி ராஜா (27) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

எருமை மாட்டின் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

எடப்பாடி அருகே கோயில் குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



