ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

எருமை மாட்டின் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 1:44 am IST

சிவகிரி அருகே எருமை மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த ரங்கசமுத்திரத்தைச் சோ்ந்தவா் நல்லுசாமி (35). கூலித் தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் சிவகிரியில் இருந்து முத்தூா் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது நிலை தடுமாறி சாலையோரமாக நின்றிருந்த எருை மாட்டின் மீது மோதியுள்ளாா்.

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து உறவினா்கள் சென்று நல்லுசாமியை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே நல்லுசாமி உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தினா். இதுதொடா்பாக நல்லுசாமியின் மனைவி கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில் சிவகிரி போலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.