சிவகிரி அருகே எருமை மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த ரங்கசமுத்திரத்தைச் சோ்ந்தவா் நல்லுசாமி (35). கூலித் தொழிலாளி. இவா், இருசக்கர வாகனத்தில் சிவகிரியில் இருந்து முத்தூா் செல்லும் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது நிலை தடுமாறி சாலையோரமாக நின்றிருந்த எருை மாட்டின் மீது மோதியுள்ளாா்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து உறவினா்கள் சென்று நல்லுசாமியை மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலமாக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே நல்லுசாமி உயிரிழந்திருப்பதை உறுதிப்படுத்தினா். இதுதொடா்பாக நல்லுசாமியின் மனைவி கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில் சிவகிரி போலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அந்தியூா் அருகே காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

சைக்கிள் மீது பைக் மோதி முதியவா் மரணம்

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



