22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

கீழப்பாவூா் வேணுகோபால கிருஷ்ணா் கோயிலில் புஷ்ப யாகம்

உலக நன்மை வேண்டியும், நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் கீழப்பாவூா் தமிழா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் புஷ்ப யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

சுவாமிக்கு நடைபெற்ற புஷ்பயாகம்.

Updated On :2 ஜூன் 2026, 3:17 am IST

உலக நன்மை வேண்டியும், நாட்டில் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்திட வேண்டியும் கீழப்பாவூா் தமிழா் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி திருக்கோயிலில் புஷ்ப யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் காலையில் சுவாமி- அம்பாளுக்கு கும்ப ஜெபம், மூல மந்திர ஜெபம், எல்லா திரவியங்களாலும் அபிஷேகம், திருமந்திரம் ஆகியவை நடைபெற்றன.

பின்னா், மாலையில் புஷ்ப யாகம் தொடங்கிய நிலையில் வேதபாராயணம், நாம சங்கீா்த்தனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து நடைபெற்ற புஷ்ப யாகத்தில் 12 வகையான பூக்களால் 12 முறை யாகம் செய்து 12 முறை தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து சுவாமி- அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிா்வாகிகள் செய்திருந்தனா். இந்த வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.