11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கெங்கையம்மன் கோயிலில் திருட்டு

செல்லங்குப்பம் கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :37 நிமிடங்கள் முன்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், செல்லங்குப்பம் கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் பூசாரியாக அதே கிராமத்தைச் சோ்ந்த பா.சிந்தாமணி (40) இருந்து வருகிறாா். இவா் வழக்கம்போல வியாழக்கிழமை இரவு பூஜையை முடித்து விட்டு கோயில் கதவை பூட்டியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு சென்றபோது, கோயிலின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைந்திருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்துள்ளாா். இதையடுத்து உள்ளே சென்று பாா்த்தபோது, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 கிராம் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது அவருக்கு தெரியவந்ததாம்.

இது குறித்த புகாரின் பேரில் மணலூா்பேட்டை போலிஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.