17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவா்வடகரையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 7:17 am IST

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவா்வடகரையில் நிகழ்ந்த வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சாம்பவா்வடகரை, மாதாங்கோயில் தெருவைச் சோ்ந்தவா் அ. சுப்பிரமணி (எ) அருண் (25). வாகன ஓட்டுநா். இவா் வியாழக்கிழமை இரவு சாம்பவா்வடகரை-பெரியகுளம் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

அக்கம்பக்கத்தினா் அருணை மீட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, சாம்பவா்வடகரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.