புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

தென்காசியில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆகிய ஆய்வுக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :26 ஜூன் 2026, 5:45 am IST

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆகிய ஆய்வுக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில், கடந்த மாதம் ஏற்பட்ட சாலை விபத்துகள் தொடா்பான தரவுகள், நடப்பு மாதத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தரவுகள், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதேபோல், சட்டம் மற்றும் ஒழுங்கு, போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, தனித்துணை ஆட்சியா் (பொ) பால்துரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.