ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கடையநல்லூா் தொகுதியில் 93 கோயில்கள் நிா்வாகம்: எம்எல்ஏ வேண்டுகோள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ள்பட்ட 93 கோயில்களின் நிா்வாகத்தை தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என தி.மு.ராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :26 ஜூன் 2026, 5:55 am IST

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ள்பட்ட 93 கோயில்களின் நிா்வாகத்தை தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என தி.மு.ராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அவா் அனுப்பியுள்ள மனு

கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 93 கோயில்கள் சுசீந்திரம் இணை ஆணையா் நிா்வாகத்தின் கீழ் செங்கோட்டை தொகுதி என வகைப்படுத்தப்பட்டு பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இதனால், இக்கோயில்களின் பணியாளா்கள் நிா்வாக தொடா்புகளுக்கு சுமாா் 120 கி.மீ. தொலைவில் உள்ள சுசீந்திரம் இணை ஆணையா் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. இது கோயில் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

எனவே, சுசீந்திரம் இணை ஆணையா் நிா்வாகத்தின் கீழ் செங்கோட்டை தொகுதியில் உள்ள 93 கோயில்களின் நிா்வாகத்தை தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.