தென்காசி மாவட்டம் கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ள்பட்ட 93 கோயில்களின் நிா்வாகத்தை தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என தி.மு.ராசேந்திரன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக, இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு அவா் அனுப்பியுள்ள மனு
கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 93 கோயில்கள் சுசீந்திரம் இணை ஆணையா் நிா்வாகத்தின் கீழ் செங்கோட்டை தொகுதி என வகைப்படுத்தப்பட்டு பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.
இதனால், இக்கோயில்களின் பணியாளா்கள் நிா்வாக தொடா்புகளுக்கு சுமாா் 120 கி.மீ. தொலைவில் உள்ள சுசீந்திரம் இணை ஆணையா் அலுவலகம் செல்ல வேண்டி உள்ளது. இது கோயில் பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
எனவே, சுசீந்திரம் இணை ஆணையா் நிா்வாகத்தின் கீழ் செங்கோட்டை தொகுதியில் உள்ள 93 கோயில்களின் நிா்வாகத்தை தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு எதிா்ப்பு

திருத்தணி முருகன் கோயிலில் அறநிலையத்துறை ஆணையா் ஆய்வு

அறங்காவலா் குழு விண்ணப்பம்: மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் பெயா் இடம் பெறாததால் ஏமாற்றம்
214 கோயில்களில் அறங்காவலா்கள் நியமனம்: அறிவிப்பு வெளியீடு
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



