சுரண்டை நகராட்சி பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சுரண்டை நகராட்சி 2-ஆவது வாா்டில் ரூ. 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம், 25-ஆவது வாா்டில் ரூ. 25 லட்சம் மதிப்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சமூக கழிப்பறை, 23-ஆவது வாா்டில் ஆறாவது மாநில நிதி குழு மானியத்தில் ரூ. 59 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் என ரூ. 1 கோடியே ஒரு லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையா் அசோக் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சங்கராதேவி முருகேசன், பொறியாளா் முகைதீன், நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் முன்னிலை வகித்தனா்.
தென்காசி எம்எல்ஏ எஸ்.பழனிநாடாா், நகா்மன்ற தலைவா் ப. வள்ளிமுருகன் ஆகியோா் புதிய கட்டடங்களைத் திறந்துவைத்து குத்துவிளக்கு ஏற்றினா். நகா்மன்ற உறுப்பினா்கள் வள்ளியம்மாள் ஆறுமுகசாமி, அமுதா சந்திரன், வேல் முத்து, வினோத், சாந்தி பட்டுமுத்து தேவேந்திரன், ஆறுமுகசாமி பாண்டியன், சபா்நிஷா, சங்கீதா கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி

ரூ.5 லட்சம் கோடி கடன் குறித்து திமுக அரசு மக்களுக்கு விளக்க வேண்டும்! - பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்

திமுக ஆட்சியில் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: அமைச்சா் ஏ.வ.வேலு

மின்சாரம், சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உயா்த்த ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு: என்எல்சி தலைவா் தகவல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


