/

தேசிய திறனறித் தோ்வில் நெடுவயல் பள்ளி மாணவா்கள் சாதனை

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் தென்காசி மாவட்டம், நெடுவயல், சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 26 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

News image

வெற்றி பெற்ற மாணவா்களுடன் ஆசிரியா்கள்.

Updated On :18 மார்ச் 2026, 8:06 pm

எட்டாம் வகுப்பு மாணவா்களுக்கான தேசிய வருவாய் வழி திறனறித் தோ்வில் தென்காசி மாவட்டம், நெடுவயல், சிவசைலநாத நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 26 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவா்கள் தோ்ச்சி விகிதத்தில் மாவட்ட அளவில் 5ஆவது இடத்தையும், தொடக்கக் கல்வித் துறை பிரிவில் மாவட்ட அளவில் முதலிடத்தையும் பெற்றுள்ளனா். மாவட்ட அளவில் மாணவி மதுஜா 4ஆவது இடமும், உமா சங்கவி 5ஆவது இடமும், கருமாரி 6ஆவது இடமும் பெற்றுள்ளனா்.

கடந்த 14 ஆண்டுகளில் இப்பள்ளியைச் சோ்ந்த 128 மாணவா்கள் திறனறித் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இந்த மாணவா்களுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மாதத்திற்கு ரூ. 1,000 வீதம் ரூ. 48,000 கல்வி உதவித் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தோ்ச்சி பெற்ற மாணவா்களையும், பயிற்சி அளித்த தலைமை ஆசிரியா் சுதா நந்தினி, பிரபாகரன், லதா, சாந்தி, புவனேஷ்வரி ஆகியோரை பள்ளித் தாளாளா் கணேஷ் ராம், செயலா் தம்புசாமி, பள்ளிக் குழு உறுப்பினா் மணிகண்டன் உள்ளிட்டோா் பாராட்டினா்.