ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சேகரிக்கும் குப்பைகளை அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமாா் 150 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் காய்கனிக் கழிவுகள், குப்பைகள் பேரூராட்சி ஊழியா்களால் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை வளம் மீட்புப் பூங்காவிற்குக் கொண்டு சென்று உரம் தயாரித்தல், மறு சுழற்சி ஆகியற்றை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக இக்குப்பைகள், காய்கனிச் சந்தை வளாகத்தில் உள்ள பயன்பாடின்றி உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சேகரித்து வைத்துள்ளனா். இதன் துா்நாற்றம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகள் வரை செல்வதால், வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இந்தக் குப்பைகளை முறையாக அகற்றுவதுடன், செயல்படாமல் பாழடைந்து கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து, தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கும் பேரூராட்சி அலுவலகத்தை இந்தக் கட்டடத்தில் செயல்பட செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது
கொங்கு மண்டலத்தில் சமுதாய கட்சிகளுக்கு வாய்ப்பு மறுத்துள்ள திமுக!

தொகுதி அறிமுகம்: 'ஆலங்குளம்'-223

ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

ரூ.1 கோடியில் சமுதாய நலக்கூடம் அமைக்க அடிக்கல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


