வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கல்லூரணியில் ரூ. 25 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல்

கோவில்பட்டி அருகே கல்லூரணி கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

News image

ஆத்திகுளம் கிராமத்தில் நியாயவிலைக் கடை கட்டடம், கல்வெட்டை திறந்து வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.

Updated On :4 பிப்ரவரி 2026, 7:35 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே கல்லூரணி கிராமத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கல்லூரணி கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டி, நிறைவுற்ற பணிகளை கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தொடங்கி வைத்தாா். மேலும், கயத்தாறு அருகே ஆத்திகுளம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 13.16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடத்தைத் திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

அவா், அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினாா்.

இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன், இந்து மக்கள் கட்சி மாவட்டச் செயலா் லட்சுமி காந்தன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் தலைவி சத்யா, வடக்கு மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலா் நவநீதகிருஷ்ணன் , ஒன்றியச் செயலா்கள் செல்வகுமாா், அழகா்சாமி, பழனிசாமி, போடுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.