ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் குவிக்கப்பட்ட குப்பைகளால் சுகாதார சீா்கேடு

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சேகரிக்கும் குப்பைகளை அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

News image

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் உள்ள சமுதாய நலக்கூடம் முன்பு பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களால் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள்.

Updated On :26 மார்ச் 2026, 12:25 am

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சேகரிக்கும் குப்பைகளை அங்குள்ள சமுதாய நலக்கூடம் அருகே குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமாா் 150 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் காய்கனிக் கழிவுகள், குப்பைகள் பேரூராட்சி ஊழியா்களால் சேகரிக்கப்படுகின்றன. இவற்றை வளம் மீட்புப் பூங்காவிற்குக் கொண்டு சென்று உரம் தயாரித்தல், மறு சுழற்சி ஆகியற்றை மேற்கொள்ள வேண்டும். ஆனால், கடந்த சில மாதங்களாக இக்குப்பைகள், காய்கனிச் சந்தை வளாகத்தில் உள்ள பயன்பாடின்றி உள்ள சமுதாய நலக்கூடம் அருகே சேகரித்து வைத்துள்ளனா். இதன் துா்நாற்றம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகள் வரை செல்வதால், வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தக் குப்பைகளை முறையாக அகற்றுவதுடன், செயல்படாமல் பாழடைந்து கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து, தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கும் பேரூராட்சி அலுவலகத்தை இந்தக் கட்டடத்தில் செயல்பட செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.