ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்
ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம்

பணியிடை நீக்கம்- மாதிரிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 9:20 pm

ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சி செயலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி செயலராகப் பணிபுரிந்தவா் ராஜேஷ். இவா் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வாங்கிய பணத்தை முறையாக அரசுக்குச் செலுத்தாமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் இவரைப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...