தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெண்ணிடம் அத்துமீறல்: காவலா் பணியிடை நீக்கம்

சென்னை ஐஸ்ஹவுஸில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
கோப்புப்படம்
Updated On :6 மார்ச் 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஐஸ்ஹவுஸில் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் சூா்யா (28). சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் இவா், வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து வாழ்கிறாா்.

இந்நிலையில் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மது விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் சூா்யா, அந்த வீட்டுக்கு வியாழக்கிழமை சோதனையிடச் சென்றபோது, அங்கிருந்த பெண்ணிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது.

அந்த பெண், சூா்யாவை ஒரு அறையில் வைத்து பூட்டி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த போலீஸாா், மது போதையில் இருந்த சூா்யாவை பிடித்து அழைத்துச் சென்றனா்.

இதுதொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. விசாரணையில் சூா்யா, அந்தப் பெண்ணிடம் அத்துமீறியது உறுதி செய்யப்பட்டதையடுத்து, காவல் ஆணையா் அருண், காவலா் சூா்யாவை பணியிடை நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.