இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

எம்.சாண்ட் கேட்டு மிரட்டல்: எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அருகே வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் கேட்டு மிரட்டியதாக எஸ்.ஐ. உள்பட 2 காவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

News image

பணியிடை நீக்கம்

மாதிரிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:50 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி அருகே வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் கேட்டு மிரட்டியதாக எஸ்.ஐ. உள்பட 2 காவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

தாழையூத்தை அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரராஜன்(52). இவா் பாலாமடை பகுதியில் கிரஷா் ஆலை மற்றும் குவாரி வைத்து தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த 27 ஆம் தேதி தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமநாதன், காவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் இவரது ஆலைக்குச் சென்று, வீடு கட்ட இலவசமாக எம்.சாண்ட் வேண்டும் எனக் கேட்டு மிரட்டினராம்.

இதுகுறித்து அவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில், விசாரணை நடைபெற்ற நிலையில், உதவி ஆய்வாளரும், காவலரும் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.