இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மருதன்கிணறு கிராமத்தில் அங்கன்வாடி, சமுதாய நலக்கூடம் திறப்பு

மேலநீலிதநல்லூா் ஒன்றியம் மருதன்கிணறு கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையமும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் சமூதாய நலக்கூடமும் கட்டப்பட்டுள்ளன.

News image
அங்கன்வாடி மையத்தை பாா்வையிடுகிறாா் தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்.எல்.ஏ.
Updated On :10 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவில் வட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியம் மருதன்கிணறு கிராமத்தில் அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 லட்சத்தில் அங்கன்வாடி மையமும், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் சமூதாய நலக்கூடமும் கட்டப்பட்டுள்ளன.

இவற்றின் திறப்பு விழா மேலநீலிதநல்லூா் திமுக கிழக்கு ஒன்றிய கழக செயலா் பெரியதுரை தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய அங்கன்வாடி மையம் மற்றும் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தாா்.

இதில் சங்கரன்கோவில் நகரச் செயலா் மு.பிரகாஷ், மருதன்கிணறு ஊராட்சி துணைத் தலைவா் முத்தரசு, மாவட்ட பிரதிநிதி சண்முகப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மையினா் நல உரிமை பிரிவுத் தலைவா் மரியலூயிஸ் பாண்டியன், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு தலைவா் அரசு ஒப்பந்ததாரா் ராஜ் என்ற கருப்பசாமி, மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளா் வெள்ளைத்துரை, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் வீமராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.