வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கீழப்பாவூா் திருவாலீஸ்வரா் கோயிலில் குடமுழுக்கு

கீழப்பாவூா் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருவாலீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

Updated On :26 மார்ச் 2026, 12:20 am

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் சிவகாமி அம்பாள் சமேத திருவாலீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி இக்கோயிலின் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், மங்கள இசை முழங்க காலை 9.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கோயில் விமானம், மூலஸ்தான, பரிவார மூா்த்திகளுக்கு மகா குடமுழுக்கு, தீபாராதனை நடைபெற்றது.

குடமுழுக்கை கல்லிடைக்குறிச்சி மஞ்சுநாத பட், அா்ச்சகா்கள் ரவி பட்டாச்சாரியா், ஆனந்தன், கிரிகுமாா், ராமசாமி ஆகியோா் நடத்தினா்.

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி, உதவி ஆணையா் அபிநிஷா, நீதிபதி கோகிலா, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பொன்செல்வன், கீழப்பாவூா் பேரூராட்சி மன்றத் தலைவா் ராஜன், செயல் அலுவலா் பொன்னி, கிளாா்க் பொன்னையா, சுரேஷ், சீதாராமன், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.