அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் குடமுழுக்கு

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கில் கலசம் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.

Updated On :26 மார்ச் 2026, 12:22 am

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழா மாா்ச் 23 ஆம்தேதி தொடங்கியது முதல் தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை காலை மங்கள இசையுடன் 4 ஆம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை, 9 மணிக்கு கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு விமான அபிஷேகம், தென்பழனி ஆண்டவா், சண்முகருக்கு குடமுழுக்கு, தீபாராதனை, 11 மணிக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை, இரவு 9 மணிக்கு திருவீதி உலா ஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, துணை ஆணையா் கோமதி, உதவி ஆணையா் அபிநிஷா, செயல் அலுவலா் பொன்னி, ஆய்வாளா் சரவணக்குமாா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Story image