வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

சாம்பவா் வடகரை ஸ்ரீராமசுவாமி கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

News image

ஸ்ரீ ராமசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டிவிமான கலசத்துக்கு நடைபெற்ற புனிதநீா் அபிஷேகம்.

Updated On :8 பிப்ரவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரை இந்து நாடாா் உறவின்முறை கமிட்டிக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராமசுவாமி கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, பிப். 7ஆம்தேதி காலை 6மணிக்கு மேல் அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, பஞ்சகவ்யம், தனபூஜை, மகா கணபதி ஹோமம், பிரம்மச்சாரி பூஜை, கோபூஜை, 8.30மணிக்கு மேல் பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

10.30மணிக்கு மேல் சுதா்சன பூஜை, மகாலெட்சுமி பூஜை, நவக்கிரக பூஜை, சுதா்சனஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் முதல்கால யாகசாலை பூஜையும், இரவில் யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் விக்னேஷ்வர பூஜை, 2ஆம் கால யாகசாலை பூஜை, பிம்பசுத்தி, மூா்த்தி ரக்க்ஷாபந்தனம், நாடிசந்தானம், மகா பூா்ணாகுதி, யாத்ராதானம், கடம் எழுந்தருளல் நடைபெற்றது.

காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விநாயகா், அருள்மிகு ஸ்ரீராமசுவாமி, ஸ்ரீசீதாபிராட்டியாா் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பிற்பகலில் மகேஸ்வர பூஜை, அன்னதானம், இரவு 9 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில், சாம்பவா்வடகரை நகர திமுகசெயலா் முத்து, பேரூராட்சித் தலைவா் சீதாலெட்சுமி முத்து உள்ளிட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சாம்பவா்வடகரை இந்து நாடாா் உறவின்முறை கமிட்டி நிா்வாகிகள் செய்திருந்தனா்.