ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் குடமுழுக்கு

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயிலில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கில் கலசம் மீது ஊற்றப்பட்ட புனிதநீா்.

Updated On :26 மார்ச் 2026, 12:22 am

தினமணி செய்திச் சேவை

தென்காசி தென்பழனி ஆண்டவா் கோயில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழா மாா்ச் 23 ஆம்தேதி தொடங்கியது முதல் தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. குடமுழுக்கையொட்டி, புதன்கிழமை காலை மங்கள இசையுடன் 4 ஆம் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், தீபாராதனை, 9 மணிக்கு கடம் புறப்பாடு, 10.30 மணிக்கு விமான அபிஷேகம், தென்பழனி ஆண்டவா், சண்முகருக்கு குடமுழுக்கு, தீபாராதனை, 11 மணிக்கு மகாஅபிஷேகம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை, இரவு 9 மணிக்கு திருவீதி உலா ஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அன்புமணி, துணை ஆணையா் கோமதி, உதவி ஆணையா் அபிநிஷா, செயல் அலுவலா் பொன்னி, ஆய்வாளா் சரவணக்குமாா், விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Story image