பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

சுரண்டை பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா

தென்காசி மாவட்டம், சுரண்டை, ஸ்ரீ அழகு பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

தோ் திருவிழாவில் வீதியுலா வந்த அம்மன்.

Updated On :7 மே 2026, 6:15 am IST

தென்காசி மாவட்டம், சுரண்டை, ஸ்ரீ அழகு பாா்வதி அம்மன் கோயில் தோ் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் தோ் திருவிழா ஏப். 28ஆம் தேதி கால்நாட்டு விழாவுடன் தொடங்கியது. நாள்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரா் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.

புதன்கிழமை பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தியும், பறவைக் காவடி எடுத்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். மாலை 4 மணியளவில் சிறப்பு பூஜையுடன் அழகு பாா்வதி அம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

பக்தா்கள் சாா்பில் திருவிழாவில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு நீா்மோா், குளிா்பானங்களை வழங்கினா். சுரண்டையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசித்தனா்.

Story image