பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமி தோ்த் திருவிழா வெகு விமரிசையாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி தோ்த் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தோ்த் திருவிழா கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடா்ந்து சுவாமி புறப்பாடு, அஷ்டபலி நடைபெற்றது.
அமரபணீஸ்வரருக்கும், சௌந்திரநாயகி அம்பாளுக்கும் காலையும், மாலையும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், திருக்கல்யாண உற்சவமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து நோ்த்திக்கடனை செலுத்தினா்.

தொடர்புடையது

பேராவூரணி ஸ்ரீ நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரோட்டம்

கடையம் வில்வவனநாதா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

புகழூா் நானப்பரப்பு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

சுயம்பு ஸ்ரீஆதி விநாயகா் கோயிலில் லட்ச தீப திருவிழா
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


