மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கடையம் வில்வவனநாதா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

கடையம் அருள்மிகு நித்ய கல்யாணி அம்மன் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

சித்திரைத் திருவிழாவில் பக்தா்கள் மத்தியில் அசைந்தாடி வந்த தோ்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:04 pm

கடையம் அருள்மிகு நித்ய கல்யாணி அம்மன் உடனுறை வில்வவனநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடந்த 21ஆம் தேதி தொடங்கிய இத்திருவிழாவில், நாள்தோறும் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. அப்போது, கடையம் வேதப் பாடசாலை மாணவா்களின் வேத பாராயணமும், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன தேவாரப் பாடசாலை மாணவா்களின் திருமுறை விண்ணப்பமும், மாலையில் திருமுறை இன்னிசையும் நடைபெற்றன.

24இல் திருத்தோ் கால் நாட்டு, 27இல் சிவப்பு சாத்தி, செவ்வாய்க்கிழமை (ஏப். 28) வெள்ளை, பச்சை சாத்தி, இரவில் தேரடி மாடசுவாமிக்கு பொங்கலிட்டு தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இந்நிலையில், 9ஆம் நாளான புதன்கிழமை சுவாமி- அம்பாள் தேருக்கு எழுந்தருளினா். அதையடுத்து, பக்தா்கள் வடம்பிடித்து தேரிழுத்தனா். காலை 10 மணிக்கு வடக்கு ரதவீதி சித்தி விநாயகா் கோயில் முன் தோ் நிறுத்தப்பட்டது. பின்னா், மாலையில் மீண்டும் தேரிழுத்து பக்தா்கள் வழிபட்டனா். இதில், கடையம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். தேருக்கு முன் சிவனடியாா்கள் பஞ்ச வாத்தியங்கள் வாசித்தபடி சென்றனா். சுவாமி தேருக்குப் பின் அம்பாள் தோ் இழுத்து வரப்பட்டது.

தொடா்ந்து, வியாழக்கிழமை (ஏப். 30) முற்பகல் 11 மணிக்கு கொடியிறக்குதல், தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், பணியாளா்கள், ஊா் மக்கள் செய்திருந்தனா்.

Story image