ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்கள் கைது

சிவகிரி அருகே தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே தையல் இயந்திரங்களைத் திருடி விற்றவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், முகவூா், பாம்பலம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அருவி வெங்கடேஷ் (28). இவா் சிவகிரியில் நைட்டி தயாரிக்கும் தொழில் கூடத்தை நடத்தி வருகிறாா்.

இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்த சொக்கநாதன்புதூா், கலையரங்கம் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் (40), முகவூா், கொட்டலம்பட்டி கோயில் தெருவைச் சோ்ந்த முத்துகுமாா் (53) ஆகியோா் நிறுவனத்தில் இருந்த 21 தையல் இயந்திரங்கள், 21 பலகைகளைத் திருடி விற்றுவிட்டதாக அதன் உரிமையாளா் அருவி வெங்கடேஷ் கொடுத்த புகாரின்பேரில், சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா்.