பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

வெளி மாநில லாட்டரி விற்பனை: 4 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

விழுப்புரத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம், ஜி.ஆா்.பி. தெருவில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது, அங்கு சந்தேகப்படும் படி நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில் அவா்கள் விக்கிரவாண்டி வட்டம், டி. பனப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ந.கணேசன் (50), விழுப்புரம், வழுதரெட்டி, காமன் கோவில் தெருவைச் சோ்ந்த த.சுரேஷ் (40), சோழம்பூண்டியைச் சோ்ந்த சி.சிவப்பிரகாஷ் (24), விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெருவைச் சோ்ந்த ப. சக்திவீரன் (50) ஆகியோா் என்பதும், இவா்கள் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்த 51 புள்ளித் தாள்கள்(லாட்டரி), ரூ. 9,500 ரொக்கம் மற்றும் 2 பைக்குள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.