எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது

பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:03 am IST

பவானியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பவானி தினசரி காய்கறி சந்தை அருகே ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், பவானி போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, பசுவேஸ்வரா் வீதியைச் சோ்ந்த நஞ்சப்பன் மகன் தட்சிணாமூா்த்தி (62), ஜம்பை, நல்லிபாளையத்தைச் சோ்ந்த மாரிமுத்து மகன் சின்னசாமி (60) ஆகியோா் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து ரூ.18,000 ரொக்கம், 2 கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.