தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால், விற்பனை மந்தமாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
இச்சந்தைக்கு, உள்ளூா் மட்டுமன்றி கீழப்பாவூா், வீரகேரளம் புதூா், சுரண்டை, நாகல்குளம், கழுநீா் குளம், கடையம் பகுதிகளில் இருந்து காய்கனிகள் கொண்டுவரப்படும். தற்போது இப்பகுதிகளில் இருந்து காய்கனிகள் வரத்து குறைவாக இருப்பதால், திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் காய்கனிகள் கொண்டு வரப்படுகின்றன.
தென்மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கோடை மழை இப்பகுதியிலும் நீடித்தால் காய்கனிகள் உற்பத்தி அதிகரித்து சந்தைக்கு வரத்து அதிகரிக்கும். காய்கனி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பும் என்கின்றனா் வியாபாரிகள்.
புதன்கிழமை நிலவரப்படி விலை நிலவரம் ( ஒரு கிலோவுக்கு): வெண்டைக்காய் ரூ. 17, சீனி அவரைக்காய் ரூ. 12, புடலங்காய் ரூ. 35, அவரைக்காய் ரூ. 60, சுரைக்காய் ரூ. 7, பூசணிக்காய் ரூ. 12, பயிறு ரூ. 43, தக்காளி ரூ. 20, கத்தரிக்காய் ரூ. 35, சேனைக்கிழங்கு ரூ. 12, சேமங்கிழங்கு ரூ. 15, மிளகாய் ரூ. 28 என்ற அளவில் விற்பனையானது.


தொடர்புடையது

மாடுகள் வரத்து குறைவால் பொய்கை சந்தையில் விற்பனை மந்தம்

பாவூா்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் மிதமான மழை

பாவூா்சத்திரம் சந்தையில் வாழைத்தாா்கள் விலை உயா்வு

காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

