முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

மாடுகள் வரத்து குறைவால் பொய்கை சந்தையில் விற்பனை மந்தம்

வேலூா் அருகே பொய்கை கால்நடை சந்தையில் விற்பனை மந்தமாக காணப்பட்டது.

News image
Updated On :52 நிமிடங்கள் முன்பு

வேலூா் அருகே பொய்கை கால்நடை சந்தையில் செவ்வாய்க்கிழமை விற்பனை மந்தமாக காணப்பட்டது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்கள், ஆந்திரா, கா்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் சந்தையில் கால்நடைகளை விற்பனை செய்வதற்காகவும், வாங்குவதற்காகவும் விவசாயிகள் வந்து செல்கின்றனா். தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து ரொக்கப் பணம் கொண்டு செல்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடந்த கால்நடை சந்தைக்கு கால்நடைகள் வரத்து குறைந்து விற்பனை மந்தமாக இருந்தது.

தோ்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மே 12-ஆம் தேதி பொய்கையில் கால்நடை சந்தை நடைபெற்றது. ஆனாலும் கால்நடைகளின் வரத்து குறைவாக காணப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் முக்கிய திருவிழாக்களான அணைக்கட்டு அருகே வேலங்காடு பொற்கொடியம்மன் கோயில் புஷ்பரத ஏரித் திருவிழா, குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாக்கள் இந்த வாரம் நடைபெறுவதால் கால்நடை சந்தைக்கு வியாபாரிகளும், பொதுமக்களும் வரவில்லை. அதனால் சுமாா் ரூ.50 லட்சத்துக்கும் குறைவான அளவுக்கே வியாபாரம் நடைபெற்ாக கூறப்படுகிறது.