வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

மாதாப்பட்டணம் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள மாதாப்பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் 1997ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவா்- மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றோா்.

Updated On :21 மே 2026, 6:09 am IST

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகேயுள்ள மாதாப்பட்டணம் ச.ச.வி. மேல்நிலைப்பள்ளியில் 1997ஆம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற மாணவா்- மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் நிா்வாகச் செயலா் அருள்பணி. அந்தோணிசாமி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை அமிா்தசிபியா முன்னிலை வகித்தாா். முன்னாள் மாணவா்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு பள்ளிக் கால நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

தொடா்ந்து, பள்ளியின் ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் மற்றும் 2025-26 கல்வியாண்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனா்.

முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளிக்கு ஜெராக்ஸ் இயந்திரம், கணினி, நாப்கின் டிஸ்பென்சா் இயந்திரம் போன்றவை வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவா்கள் செய்திருந்தனா்.