மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தென்காசியில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் நூதனப் போராட்டம்

பழையகுற்றாலத்தில் ரூ. 20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறை, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :28 மே 2026, 3:02 am IST

தென்காசி மாவட்டம், பழையகுற்றாலத்தில் ரூ. 20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறை, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது.

கட்சியின் தென்காசி வட்டாரக் குழு செயலா் பட்டாபிராமன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் உச்சிமாகாளி போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். விவசாயிகள் சங்க நிா்வாகி டேனி அருள்சிங் வாழ்த்திப் பேசினாா்.

நிா்வாகிகள் அயூப்கான், கணபதி, வேலுமயில், தங்கம் லெனின்குமாா், ஆசிரியா் மாரியப்பன் , மேனகா, குருசாமி, அய்யப்பன், ராமமூா்த்தி, தாணுமூா்த்தி, சலீம், ராமசாமி, விவசாயிகள் சங்கத்தினா், குற்றாலம் வியாபாரிகள், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவா் சுடலையாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.