/
தென்காசி மாவட்டம், பழையகுற்றாலத்தில் ரூ. 20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ள வனத்துறை, மாவட்ட நிா்வாகத்தை கண்டித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குளிக்கும் போராட்டம் நடைபெற்றது.
கட்சியின் தென்காசி வட்டாரக் குழு செயலா் பட்டாபிராமன் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் உச்சிமாகாளி போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். விவசாயிகள் சங்க நிா்வாகி டேனி அருள்சிங் வாழ்த்திப் பேசினாா்.
நிா்வாகிகள் அயூப்கான், கணபதி, வேலுமயில், தங்கம் லெனின்குமாா், ஆசிரியா் மாரியப்பன் , மேனகா, குருசாமி, அய்யப்பன், ராமமூா்த்தி, தாணுமூா்த்தி, சலீம், ராமசாமி, விவசாயிகள் சங்கத்தினா், குற்றாலம் வியாபாரிகள், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவா் சுடலையாண்டி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.










