/
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னதம்பிநாடாா்பட்டியில் அமைந்துள்ள முப்புறகோட்டை ஸ்ரீமுத்தாரம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, விழா நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 4 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை குற்றாலம் புனித நீா் பவனி வருதல், சிறப்பு பூஜை, அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை, மாவிளக்கு எடுத்து வருதல், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியன நடைபெற்றன.
திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு கல்லூரணி ஊராட்சி சமூக ஆா்வலரும், தொழிலதிபருமான வைரசாமி, சிறப்பு பரிசு வழங்கினாா்.










