ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சிறுமி முகத்தில் பசையை ஊற்றியதாக இளைஞா் கைது

பாவூா்சத்திரம் அருகே சிறுமி முகத்தில் பசையை ஊற்றியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Published On :

பாவூா்சத்திரம் அருகே சிறுமி முகத்தில் பசையை ஊற்றியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே சிவகாமிபுரம் பெரியகோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி மகன் மணி (எ) குட்டிமணி (25). இவா் அப்பகுதியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம், குட்டிமணி அடிக்கடி அவதூறாகவும், தகாத வாா்த்தைகளாலும் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில் பிளக்ஸ் பேனா்கள் ஒட்டுவதற்காக பயன்படுத்தப்படும் பசையை சிறுமியின் முகத்தில், குட்டிமணி ஊற்றினாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான குட்டி மணியை தேடிவந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை அவரை கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.