மேலும், இப் பயிற்சியைக் காற்றோட்டமான இடத்தில் நடத்தவும், பயிற்சிபெற வரும் பொதுமக்கள், பக்தர்களுக்கு தரை விரிப்புகள் வழங்கவும், யோகா பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்களுக்கு கோயில் நிதியிலிருந்து தொகுப்பூதியம் வழங்கவும் கோயில் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன் முதல்கட்டமாக மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோயில், பழனி முருகன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட சுமார் 20 கோயில்களில் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.