ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமி

பிரதமர் மோடியை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி விமர்சித்திருப்பது பற்றி...

News image
பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி (கோப்புப்படம்)
Updated On :10 மார்ச் 2026, 3:27 am

இணையதளச் செய்திப் பிரிவு

அமெரிக்காவுடன் பிரதமர் நரேந்திர மோடி சமரசம் செய்ததாக தனக்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார்.

அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்ட விவகாரத்தில் பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

நாடாளுமன்றத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியிலும் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக சுப்ரமணியன் சுவாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கும் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது:

“நாட்டின் மூன்றாவது முறையாகப் பிரதமராகி இருக்கும் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறார்?

எனக்குத் தெரிந்த அமெரிக்கர்கள், மோடி சமரசம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். அந்த தகவல்களை வெளியிட்டால் பிரதமர் பதவியை மோடி ராஜிநாமா செய்ய வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், தன்னிடம் தகவல்கள் இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.