சுரண்டையில் சனிக்கிழமை நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயமடைந்த தச்சுத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
சாம்பவர்வடகரை, ஆசாரி தெருவைச் சேர்ந்தவர் அ.ஆறுமுகம் (32).
தச்சுத் தொழிலாளியான இவர், சனிக்கிழமை தச்சு வேலைக்கு சென்றாராம்.
பின்னர் மதியம் சுரண்டை பஜாரில் உள்ள உணவகத்துக்கு சென்று சாப்பிட்டுவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் வேலைக்கு திரும்பியுள்ளார். சுரண்டை- ஆனைகுளம் சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையில் சறுக்கி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.