சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் ரூ. 2 லட்சம் திருட்டு

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் ரூ. 2 லட்சத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்

News image
Updated On :5 ஜனவரி 2013, 10:57 pm

தினமணி

திருநெல்வேலியில் ஓய்வுபெற்ற மாநகராட்சி ஊழியரிடம் ரூ. 2 லட்சத்தை திருடிச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளை. மகாராஜநகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (68). மாநகராட்சி ஊழியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர், வெள்ளிக்கிழமை திருநெல்வேலி சந்திப்பில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 2 லட்சம் பணத்தை எடுத்துள்ளார்.

பின்னர் அந்தப் பணத்தை தனது மொபட்டில் சீட்டுக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்தாராம். இந்நிலையில் திடீரென அவரது மொபட் டயர் பஞ்சரானதாம். இதையடுத்து மொபட்டை அங்கேயே நிறுத்திவிட்டு, பஞ்சர் ஒட்டுவதற்கான நபரை தேடி சென்றாராம். திரும்பி வந்து பார்த்தபோது, மொபட்டில் வைதிருந்த ரூ. 2 லட்சத்தை காணவில்லையாம். அதற்குள் மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து அவர் திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதியவரிடம்  திருட்டு: இதேபோல் பாளையங்கோட்டையில் முதியவரிடம் ரூ. 50 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

பாளை. பரதர் தெருவைச் சேர்ந்தவர் பரமசிவன் (65). இவர், வெள்ளிக்கிழமை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு வங்கியில் இருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தை எடுத்தாராம். அந்த பணத்தை தனது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தாராம்.

இந்நிலையில் இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, டீ குடிக்க சென்றாராம். திரும்பி வந்து பார்த்தபோது பணத்தை காணவில்லையாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.