திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் இந்திராகாந்தி நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், அலுவலகம் முன் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில், மாவட்ட தலைவர் கே. ராம்நாத், பொதுச் செயலர் சங்கரபாண்டியன், முன்னாள் எம்பி ராமசுப்பி, முன்னாள் எம்எல்ஏ வேல்துரை, சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் உள்ள இந்திராகாந்தி உருவப்படத்துக்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.