நெல்லை அம்மா மருந்தகத்தில் ஆட்சியர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலி சந்திப்பு கூட்டுறவு பேரங்காடியில் அம்மா மருந்தகம் இயங்கி வருகிறது. கடந்த 9.10.2014 முதல் செயல்பட்டு வரும் இந்த மருந்தகத்தில், பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளும் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தின் செயல்பாடுகளை ஆட்சியர் மு.கருணாகரன், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:










