தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் டி. அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் செய்யது, மாவட்டப் பொருளாளர் சாந்திஜாபர், செய்தி தொடர்பாளர் எச். ஜமால், மீனவரணி பிரிவு நிர்வாகி தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். ஷெரீப், மாநில பொதுச்செயலர் கே.ஆர்.எம். ஆதிதிராவிடர் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்: முஸ்லிம்களுக்கு எதிரான பொதுசிவில் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்; மக்கள் விரோதப் போக்கை கடைப்பிடித்து வரும் மத்திய அரசை கண்டித்து அரசு அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவது; டிச. 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் ரத்த தான முகாம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகி லெனின் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: மாடு, ஒட்டக இறைச்சி விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு!

பணக்காரர்கள் பணக்காரர்களாகவும் ஏழைகள் ஏழைகளாகவும் இருப்பதே பாஜகவின் கொள்கை: கார்கே
தமிழகத்தில் சாதனை வசூலைச் செய்த கருப்பு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா? -கனிமொழி கேள்வி
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


