தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மேலப்பாளையத்தில்  சாலை மறியல்

மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலையை சீரமைக்கக் கோரி மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 1:57 am

DIN

மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலையை சீரமைக்கக் கோரி மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மேலப்பாளையத்தில் புதன்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
மனிநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயலர் மைதீன், மாவட்ட துணைத் தலைவர் மகபூப் ஜான், மாவட்ட துணைச் செயலர் ரசூல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக அக்கட்சியினர் கூறியது: மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறையினரிடம் புகார் அளித்துவிட்டோம். ஆனால் நடவடிக்கை இல்லை. 
அதனால் சாலை மறியலில் ஈடுபடப் போவதாக கடந்த வாரமே அறிவித்தோம். அப்போதும் நடவடிக்கை இல்லை. அதன் காரணமாகவே இப்போது சாலை மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.  சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.