தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாளை.யில் தமிழ்ச் சொற்பொழிவு

நெல்லை கம்பன் கழகத்தின் 409ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 11:51 pm

DIN

நெல்லை கம்பன் கழகத்தின் 409ஆவது கம்பராமாயணத் தொடர் சொற்பொழிவு பாளையங்கோட்டையில் அண்மையில் நடைபெற்றது.
அருள்மிகு ராமசாமி கோயில் வளாகத்தில் உள்ள தியாக பிரம்ம இன்னிசை மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா இறைவணக்கம் பாடினார். கழக துணைத் தலைவர் ந.சு.சங்கரன் வரவேற்றார். கம்பனிடம் கற்கலாம் இணைந்து செயலாற்ற என்ற தலைப்பில் கோவில்பட்டி நல்லாசிரியர் கு.ராசாமணியும், தாடகை வதம் என்ற தலைப்பில் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தியும் சொற்பொழிவாற்றினர். பேராசிரியர் காந்திமதிநாதன், சு.பாண்டியன், தங்கராஜ், குகநமச்சிவாயம், வெள்ளத்துரை, கிருஷ்ணன், கணேசன், பிள்ளைசூரியன், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். கழகச் செயலர் பொன்.வேலுமயில் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.