விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

பல்கலைக்கழக மாணவர்களுக்கான  தடகளம்: இன்று தொடக்கம்

பல்கலைக்கழகங்கங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை (ஏப். 5) தொடங்க உள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:47 am IST

பல்கலைக்கழகங்கங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை (ஏப். 5) தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: இப் பல்கலைக்கழகமும்,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தும் தமிழக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தடகளப் போட்டிகள் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஏப். 5, 6) பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில், 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 300 வீரர் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க உள்ளனர். 
போட்டிகளை திருநெல்வேலி சரக காவல்துணைத் தலைவர் கபில்குமார் சராட்கர் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். துணைவேந்தர் கி.பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர். வெள்ளிக்கிழமை (ஏப். 6) நடைபெறும் நிறைவு விழாவில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் பரிசுகளை வழங்க உள்ளனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையினர் செய்து வருகிறார்கள் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.