தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்: எஸ்.வி.சேகர்

தமிழகத்தில் கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் நடிகர் எஸ்.வி.சேகர். 

Updated On :9 ஏப்ரல் 2018, 1:37 am

தமிழகத்தில் கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் நடிகர் எஸ்.வி.சேகர். 
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது: 
தமிழகத்தில் கோயில் சிலை, நகை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க கோயில் நிர்வாகப் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.    வரும் தேர்தல் ஆன்மிகத்துக்கும், நாத்திகத்துக்குமானதாக இருக்கும். தமிழகத்தில் இனி தெய்வீக சின்னம் ஜெயிக்கும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சி செய்வதே சிறப்பானதாக இருக்கும். 
யோகாசனம் உடலுக்கு நல்லது என்பதை உணர்ந்தாலும், அதனை பிரதமர் நரேந்திரமோடி சொன்னதால் எதிர்க்கும் மனநிலை பலருக்கும் உருவானது. அதுபோன்றுதான் பல்வேறு பிரச்னைகளிலும் வெளிப்படுத்தப்படுகிறது.  இந்து மத பெருமையே நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாகும். நம்பிக்கை வைத்தால் அனைத்திலும் வெற்றி பெற முடியும் என்றார் அவர்.
தொடர்ந்து, இந்து தர்ம மேம்பாட்டுக்கான சேவை அமைப்பு சார்பில் இந்து மதத்தின் மகிமைகளையும், ஆன்மிக உன்னதங்களையும் முன்னிறுத்தி இந்துக்களை ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற்ற கருத்தரங்கில் எஸ்.வி.சேகர் பேசினார்.  சென்னை வேங்கடகிருஷ்ணன்,  ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், கல்யாண ராமன், ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.