ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் பேரணி

பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

பாளையங்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
 அஞ்சல் நிலையங்களில் வங்கி சேவை அளிக்கும் திட்டம் இம் மாதம் 21 ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கப்பட  உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பிற வங்கிகளில் உள்ள அனைத்து வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக ரூ.1 லட்சம் வரையிலான டெபாசிட், பிற வங்கிக் கணக்குக்குகளுக்கு பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவை அளிக்கப்பட உள்ளன. திருநெல்வேலி கோட்டத்தில் பாளையங்கோட்டை, களக்காடு, பத்தை, படலையார்குளம், சிங்கம்பத்து அஞ்சலகங்களில் இம் மாதம் 21 ஆம் தேதி முதல் இத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அஞ்சல் துறையின் வங்கி சேவை குறித்த விழிப்புணர்வுப் பேரணி பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
 திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் இரா.சாந்தகுமார் தலைமை வகித்தார். உதவி அஞ்சல் கோட்ட  கண்காணிப்பாளர்கள் வேதராஜன், பொன்னையா, குமரன், இந்திய அஞ்சல் பே மண்ட்ஸ் வங்கி மேலாளர் விஜய் ,தலைமை அஞ்சல் அதிகாரி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.