கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

மேலப்பாளையத்தில் தமுமுக ஆர்ப்பாட்டம்

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

மேலப்பாளையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் கே.எஸ்.ரசூல் மைதீன் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், அந்த வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும், மேலப்பாளையம் சந்தைமுக்கு பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அலிப் பிலால் தலைமை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் ஜமால், பொருளாளர் சுல்தான், மாவட்ட துணைத் தலைவர் ஏர்வாடி முகைதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ப.அப்துல் சமது, துணை பொதுச் செயலர் முகமது கவுஸ், மாநிலச் செயலர் எஸ்.மைதீன் சேட்கான், கிழக்கு மாவட்டத் தலைவர் ரசூல் மைதீன், மேற்கு மாவட்டத் தலைவர் நயினார் முகமது ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மனிதநேய மக்கள் கட்சியின் ஊடகப் பிரிவு நிர்வாகி ஜாபர், தமுமுக இளைஞரணி மாவட்டச் செயலர் யூசுப் சுல்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.